Wednesday, December 30, 2009

புத்தாண்டு வாழ்த்துக்கள்.2010

வரும் வருடம் "2010" உங்கள் விருப்பம் போல் அமைய வாழ்த்துக்கள்.






நன்றி அன்பர்களே.......

Tuesday, December 15, 2009

காதலிப்பதும் காதலிக்கபடுவதும்.

உலகத்தில் உள்ள ஒவ்வொரு விசயமும் அறியபடும் போது,அதிசயம் தான்.ஆனால் அந்த விஷயமானது அப்படியே தான் இருக்கிறது.அதன் பின் அது பழக்கமாகிவிடுகிறது.

அது போல ஓர் உன்னதமான விஷயம் தான்,காதல்.காதல் என்கிற விஷயம் பழக்க பட்டதாக இருக்கலாம்.ஆனால் காதலிப்பதும்,காதலிக்க படுவதும் ஒரு உன்னதமான அதிசயமான விஷயம்.


காதல் அறியபட்டதாகின்,காதலிப்பதும்,காதலிக்க படுவதும் ஏன் அதிசயமானது ஆகிறது என கேட்கலாம்.இங்கே காதலிப்பதிலும்,காதலிக்கபடுவதிலும்,காதல் அறியபடுவதில்லை.மாறாக ஒவ்வொருவரும்,தன்னை தானே அறிகிறார்கள்.

Alique padamse என்னும் விளம்பர உத்தியின் மன்னர்,ஒருமுறை அளித்த பேட்டியில்,கூறுகிறார்-நான் ஒரே சமயத்தில் பலருடன் காதல் கொண்டிருக்கிறேன்.ஆனால் ஒவ்வொருவரிடமும் புதுமையாகவே உணர்கிறேன்.



காதல் என்பது காமம் இல்லை.காதலின் வழியாக தன் காமத்திற்கு துணை தேடி கொள்ளலாம்.ஆனால் காதல் ஆனது முற்றிலும் வேறுபட்டது.நீங்கள் யாரையாவது,ஒரு சூழலில் காதலித்து இருக்கலாம்.அவர் மீது உங்கள் மூச்சு காற்று கூட பட முடியாத தூரத்தில் காதலித்து இருக்கலாம்.பத்து வயதில்,ஆறாம் வகுப்பில் இது நடந்திருக்கலாம்.

இப்போது,சுமார் நாற்பது வயதில்,சற்றே நினைவு கூறுங்கள்.நெஞ்சில் இதமாக ஒரு வித உணர்வு வந்து போகும்.இந்த எதிபார்ப்பில்லாத அன்பு தான் காதல்.நேசிப்பு.

மாறாக,கல்லூரி பருவத்திலோ,அல்லது பதின்ம வயதிலோ ஒரு ஆண் பெண்ணையோ,பெண் ஆணையோ,காதலிப்பதாக (சொல்லபடுவது) ஒன்றாய் சுற்றி,ஏதோ ஒரு சூழலில் ஒன்றி,ஒன்றாகி போய் இருந்தால்,இப்போது,சுமார் இருபது வருடங்கள் கழித்து,நினைவு கூறுங்கள்,உங்களுக்குள் ஒரு ஆனாகின்,கிளுகிளுப்பான அல்லது பென்னாகின் அருவருப்பான  உணர்வு வந்து போகும்.


இரண்டுக்கும் உள்ள வேறுபாடு,முன்னது ஆட்டோகிராப்,பின்னது சிவப்பு ரோஜாக்கள்.ஆக காதல் எதிர்பார்ப்பில்லாத அன்பு,சக உயிர்களின் மேலான நேசிப்பு.காமம் இறந்தால், காதல் நீடித்து இருக்கிறது,காமம் இருந்தால் காதல் இறந்து விடுகிறது.காதலானது காமத்தில் அழிந்து விடுகிறது.ஆனால் காமம்-காதலின் முடிவல்ல.

இதனாலேயே,திருமணத்திலேயே அநேக காதல் முடிந்து விடிகிறது.திருமணம் வரை காதலை தேடியவர்கள்,திருமணமான முதல் நாளின் அன்றே காமத்தை தேட தொடங்குகிறார்கள். இவ்வாறனவர்கள் புதிதாய் காதலிக்கலாம்-முடிந்தவரை அவர்களையே.அடுத்தவர்களுடன் முயற்சித்தால்,அதற்கு நான் பொறுப்பல்ல.



ஒருமுறை, சென்னை,அண்ணா நகர்,ரவுண்டானா-இல் உள்ள கனரா வங்கியின் ஏடிம்-சென்றேன்.எனது பைக்யை,இருந்த இடைவெளியில் நிறுத்த முயற்சிக்கையில்,அருகில் நின்றிருந்த நபரை,லேசாக இடித்து விட்டேன்.என் காலும்,அவர் மீது பட்டு விட்டது.

சம்பிரதாயமாக சாரி சார்,என்றேன்.எப்படியும் இங்கே ஒரு குறைந்த பட்சம் வார்த்தை மீறலாவது வரும் என்று தான் எண்ணியிருந்தேன்.அவரோ,மிகவும் நிதானமாக பரவாயில்லை.என்று சொன்னார்.

நான் ஏடிஎம்-ஐ பார்த்தேன்,சில ஆண்,பெண்கள் வரிசையில் நின்று கொண்டிருந்தார்கள்.அவரோ பரவாயில்லை என்று நிதானமாக கூற,வேகமாக சென்ற நான் சற்றே தயங்கி,அவரிடம்,சார்,ஒரு பொண்ணுக்காக காத்து கொண்டிருகிறீர்களா.?என்றேன்.ஆமாம் என்ற அவர் முகத்தில் ஒரு சின்ன புன்னகை.




அவர் காதலனாக அறியபட்டிருக்கிறார்.......அந்த அதிசயத்தை உணர்ந்து கொண்டிருக்கிறார்.

காமம் இல்லாததால்,காதலிக்கவும்,காதலிக்கபடவும்,எதிர்பால் தான் வேண்டும் என்றில்லை.நேசியுங்கள்,நேசிக்கபடுங்கள்.

அனைத்தையும் சமமாக பாவியுங்கள்,அப்போது,அன்பு செலுத்துவது சுலபமாகிவிடும்.அன்பு செலுத்துங்கள்,அப்போது அன்பு கிடைப்பது சுலபமாகி விடும்.




என்ன மக்களே,காதலிப்பதும்,காதலிக்கபடுவதும்,உன்னதமான அதிசயம்தானே...

பின்குறிப்பு:இவ்வளவுக்கும் பிறகு,இல்ல எனக்கு காதல்-னாலே பிடிக்காது,நான் அப்படிபட்டவன் கிடையாது-ன்றவங்க கடைசிலே இருக்கிற அசின் படத்த ஒரு பத்து நிமிஷம் பாருங்க....பொண்ணுங்களுக்கு-என்ன சொல்றதுன்னு தெரியல்ல...நீங்களே ஒரு நல்ல முடிவுக்கு வாங்க.

Saturday, November 7, 2009

கல்யாணக் கடிதம்

கால ஓட்டத்தில் நிறைய மாரிதான் போய்விட்ட்டோம்.எத்தனையோ தொலைத்து,எதையோ பெற்று இருக்கிறோம்.அதில் ஒன்று தான் செல் போன்.இதற்க்காக நாம் தொலைத்தது-கடிதம்,தந்தி ஆகியன.

கடிதமானது பல வழிகளில் பயன் பட்டது.முதலாவதாக,மரியாதையை கற்று தந்தது.கடிதம் எழுதும் போது சம்பிரதாயமாக "அன்பும்,பண்பும்,பாசமும்,நிறைந்த,அப்பா அவர்களுக்கு,உங்களின் ஆசிர்வாதங்களுடன் மகன் மன்னார் அல்லது இன்னார்"-என்று தொடங்கும் கடிதம் நம்மை அறியாமலே நம்முள் ஒரு மரியாதையை ஏற்படுத்தியது.

ரெண்டவதாக,கடிதம் என்பது நாம் பிறர் பால் கொண்ட அன்பினை வெளிப்படுத்தும் ஒரு ஊடகமாகவும் இருந்தது.சொல்ல முடியாத சில உணர்வுகளை எழுத்தில் சொல்ல முடிந்தது.

மூன்றாவதாக,கடிதம் ஒரு காகிதமாக மட்டுமல்லாமல் கால புத்தகத்தில் பதிவு செய்யும் ஒரு பக்கமாகவே இருந்தது.முன்பெல்லாம் என் தாத்தா,நான் எழுதிய கடிதத்தை,அடுத்த கடிதம் வரும் வரை படித்து கொண்ட இருப்பார்.ஆக கடிதம் ஒரு நிலையான ஆதாரமாகவும் இருந்தது.

சில சமயங்களில் நமது எண்ணங்களை நாசுக்காக வெளிப்படுத்தும் ஊடகமாகவும் இருந்தது.எனவே நாம் தொலைத்தது கடிதம் மட்டுமல்ல,அதனால் கிடைக்கும் அனைத்து சந்தோஷமும் தான்.

இன்று செல் போன்-இல் எவ்வளவு நேரம் பேசினாலும்,போனை வைத்த பின்,பேசியவர்களின் அன்பு சந்தேகத்திற்கு இடமனதாகவே உள்ளது.பரஸ்பர அன்னியோனியத்தை தருவதில்லை.செல் போனில் தந்தி போல் பாவித்து பதில் போடவும் என தனது ஏக்கங்களை தெரிவிக்க முடியாது.

சுமார் பத்து வருடங்களுக்கு முன்,எங்கள் கிராமத்தில் இருந்து சென்னை-ல் மளிகை கடைக்கும்,ஓட்டலுக்கும் வேலைக்கு வருபவர்கள் ஏராளம்.படித்து நல்ல வேலைக்கு வருபவர்கள் சமீபத்தில் தான்.ஏனென்றல் எங்கள் கிராமத்தில் முதல் டிப்ளோமா படித்தவன் நான்(சரியாய் பத்து வருடத்திற்கு முன்).முதல் டிகிரி முடித்து என் தங்கை. அப்போதெல்லாம் கடிதம் மட்டுமே சாத்தியம்.டெலிபோன் கட்டணம் அதிகம்.டேலேபோனும் எங்கள் கிராமத்தில் இல்லை.இரண்டயிறது இரண்டில் தான் முதல் டெலிபோன் எங்கள் கிராமத்திற்கு/வீடிற்கு வந்தது.

அந்த சமயத்தில் சென்னையில் வேலை செய்யும் இருபத்தி ஐந்து மதிக்க தக்க ஒருவன் எழுதிய கடிதமும்,அவனது அப்பாவின் பதிலும் தான் இன்றைய பதிவு.

;மகனின் கடிதம்....
;
;
அன்பும்,பண்பும்,பாசமும் நிறைந்த அப்பா,அம்மா அவர்களுக்கு,உங்கள் பாசத்திற்குறிய மகன் சொரிமுத்து எழுதிக்கொள்வது என்னவென்றால்,இங்கு நான் நலம்.என்னோடு வேலை பார்க்கும் அனைவரும் நல்ல படியாக இருக்கிறோம்.அதுபோல் வீட்டில் நீங்கள்,அம்மா,தம்பி, தங்கை, அனைவர் நலமும் அறிய ஆவல்.பக்கத்துக்கு வீட்டு சித்தப்பா,சித்தி,அவர்கள் குழந்தை நலமா?.

மேலும் நீங்கள் அறிவது என்னவென்றால்,எனக்கு உடம்புக்கு சரியில்லை.வயிறு வலிக்குது. சாப்பாடு ஒத்துகொள்ளவில்லை என டாக்டர் கூறினார்.அதலால் ஊருக்கு வந்து விடலாம் என்று கூட எண்ணுகிறேன்.

இந்த கடிதம் கண்ட உடன் தந்தி போல் பதில் அனுப்பவும்.


இப்படிக்கு,
அன்புள்ள
சொரிமுத்து.


தந்தையின் பதில்...
;
;
அன்புள்ள மகன் சொரிமுத்து-க்கு அப்பா ஆயிராமு அனேக ஆசிர்வாதங்களுடன் எழுதிக்கொள்வது,உன் தபால் கண்டேன்.உன் நலம் அறிந்தேன் மகிழ்ச்சி.இங்கு இறைவன் அருளால் எல்லாம் நல்ல படியாக நடக்கிறது.நாங்கள் அனைவரும் நலம்.

மேற்படி,வயிற்று வலி பற்றி எழுதியிருந்தாய்.சில சமயம் வெளி சாப்பாடு இப்படி தொல்லை கொடுப்பதுண்டு.மேலும் இங்கு மழை பெய்துள்ளதால் விவசாய வேலை அவசரகதியில் நடந்து கொண்டியிருக்கிறது.ஆதலால் இப்போதைக்கு நீ புறப்பட்டு வருவது உசிதமல்ல.

இன்னொரு முக்கியமான செய்தி.நம்ம எதிர் வீட்டு "அடைமழை" மாமா மகள் வயசுக்கு வந்து நாலு வருஷம் ஆகிறது.அவர்கள் பொண்ணுக்கு கல்யாண விஷயம் பற்றி கேட்டுகொண்டே இருக்கிறார்.நல்லபுள்ளயாகவும்,நமக்கு தெரிந்த இடமாகவும் இருப்பதால், அவளையே உனக்கு முடித்து விடலாம் என நானும்,உன் அம்மாவும்,"அடைமழை" மாமாவோடு பேசி முடித்து இருக்கிறோம்.

அடுத்த மாசம் பத்தாம் தேதி நாள் நல்ல இருப்பதால்,அன்றே உறுதி செய்து விடலாம் என உள்ளோம்.ஆகையினால் பத்தாம் தேதியை கணக்கு பண்ணி வரவும்.மேற்கொண்டு விவரத்தை நேரில் பேசிக்கொள்ளலாம்.


இப்படிக்கு,
அப்பா,
ஆயிராமு.